உசிலம்பட்டி அருகே கியாஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து மகள்களுடன் டீக்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்காதலை கைவிடாத அவருடைய மனைவி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பரபரப்பு தகவல்களும் தெரியவந்தன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 35). டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு பிரதீபா (8), ஹேமலதா (5) என்ற 2 மகள்கள்.
இந்த நிலையில் கீதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தெரியவந்ததும் கருப்பையா தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது.