இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடக்க இருந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை கொட்டி தீர்த்தது.
பிட்ச்சை பாதுகாக்க மூடப்பட்டு இருந்த தார்ப்பாயில் இருந்த ஓட்டை வழியாக தண்ணீர் இறங்கியதால் ஆடுகளம் ஈரப்பதமானது. மழை விட்ட பிறகு ஆடுகளத்தை உலர வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கார் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.